தமிழக மக்கள் கழக மாநாடு-புறக்கணித்த நடராஜன்!
கரூர்: கரூரில் நடைபெற்ற தமிழக மக்கள் கழகம் மாநாட்டை புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் புறக்கணித்தார்.
கரூரில் தமிழக மக்கள் கழகம் சார்பில் தேர்தல் விழுப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக மக்கள் கழகம் மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அழைப்பிதழ், போஸ்டர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மாநாடு துவங்கிய பின்னரும் அவர் மேடைக்கு வரவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் மேடை முன் கலாட்டா செய்தனர். அவர்களை மாநாட்டு பிரநிதிகள் அமைதிப்படுத்தினர்.
மாநாட்டிற்கு வருவது குறித்து ம.நடாராஜன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விழாவுக்கு அவர் வரவில்லை.ரத்து செய்துள்ளார் என்று கூறினர்.
ஆனால், ம.நடராஜன் இந்த விழாவுக்கு வராததற்கு காரணம், தமிழக மக்கள் கழகம் கட்சியின் மாநில தலைவர் முனுசாமி மீது மாநாடுக்கு ஒரு நாள் முன்னதாக கரூர் நகர காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து கரூர் நகர காவல் ஆய்வாளர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். இதை தெரிந்து தான் அவர் வரவில்லை என்று பரவலாக பேச்சு உள்ளது.