For Daily Alerts
Just In
ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில்தான் முத்துக்குமாரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
தமிழ்நாடு chennai சென்னை தமிழர்கள் இலங்கை பெண்கள் eelam ஈழம் genocide இனப்படுகொலை fast unto death சாகும் வரை உண்ணாவிரதம் முத்துக்குமார் women muthukumar tamilnadu
Story first published: Wednesday, April 15, 2009, 9:36 [IST]