தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் இந்திய குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
ஜெத்தா. சென்ற வெள்ளிக்கிழமை, தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி இஸ்திரகாவில் நடைப்பெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் போது எராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு விழாவின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாலிபால், ஓட்டப்பந்தயம், வளையம் இடுதல், நீச்சல், பாஸ்கெட் பால், கயிர் இழுத்தல், பொது அறிவுப்போட்டி போன்ற எராளமான விளையாட்டு போட்டிகள் ஆடவர்களுக்காக நடத்தப்பட்டது.
அதுபோல் பெண்களுக்கு தனியாக பொது அறிவுப் போட்டி, கயிர் இழுத்தல் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
சிறார்களுக்காக ஓட்டப்பந்தயம், வளையம் இடுதல், நீச்சல், ஸ்கிப்பிங், ஞாபகத்திறன் போட்டி மற்றும் தொடர் பந்து போட்டி ஆகியவைகளும் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு பற்றிய விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தை ஜித்தா இந்திய பண்ணாட்டுப் பள்ளியின் முன்னாள் நிர்வாக கமிட்டி தலைவர் அக்பர் பாட்சா முன்னின்று நடத்தினார்.
மற்ற நாடுகளைப் போல வெளிநாடு வாழ் (மத்திய கிழக்கு நாடுகள்) இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
போட்டியில் வென்றோருக்கு சவூதி தமிழ்ச் சங்கத் தலைவர் அப்துல் மாலிக், முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோருக்கு தஃபாரஜ்-ஜெத்தா சார்பில் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.