For Daily Alerts
Just In
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியது
இன்று காலை 10.41 முதல் 11.05 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாண மேடைக்கு காலை 10.05 மணிக்கு மணக்கோலத்தில் சுந்தரேஸ்வரர் அழைத்து வரப்பட்டார். 10.15 மணிக்கு மணப்பெண் கோலத்தில் மீனாட்சி அழைத்து வரப்பட்டார்.
11 மணிக்கு தாரைவார்ப்பும், 11.05 மணிக்கு மங்கல நாண் பூட்டுதலும் நடந்தது.
திருமணத்தையொட்டி 1200 கிலோ எடை பூக்களைக் கொண்டு மேடை அலங்காரம் நடத்தப்பட்டிருந்தது.
இன்று இரவு 7 மணிக்கு மாசி வீதிகளில் அம்மனும், சுந்தரேஸ்வரரும் உலா வருவார்கள். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
Comments
மதுரை தமிழ்நாடு மதம் திருவிழா tamilnadu wedding மீனாட்சி அம்மன் celestial wedding திருக்கல்யாணம் meenakshi amman temple
Story first published: Tuesday, May 5, 2009, 13:32 [IST]