பிரபாகரன் உடலை பார்க்க வேண்டும்-உறவினர் கண்ணீர் பேட்டி
விடுதலை புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனின் உறவினர்களான பரமேஸ்வரன்-ஜானகியம்மாள் தம்பதி கொல்லத்தில் வசித்து வருகிறார்கள். பிரபாகரனின் மரண செய்தி கேட்டு கதறி அழுத 71 வயதான ஜானகியம்மாள் கூறுகையில்,
பிரபாகரனை பற்றிய செய்திகளும், படங்களும் சமீப காலமாக பத்திரிக்கையிலும், டிவியிலும் வந்தபோது அவரை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.
அவருக்கு ஒரு ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என பிரார்த்தனை செய்தோம். ஆனால் விதி மீறி அவரை தட்டி பறித்து விட்டது. அவர் சரண் அடைந்து இருக்கலாம். இனி இதையெல்லாம் சொல்லி ஒரு பயனும் இல்லை.
காலையில் நான் கடைக்கு போகும்போது பிரபாகரன் இறந்து போனதாக சிலர் சொல்ல கேட்டேன். முதலில் நான் நம்பவில்லை. அது வெறும் வதந்தியாக இருக்கலாம் என நினைத்தேன்.
ஆனால் சில பத்திரிக்கையாளர் என்னை தேடி வந்து பிரபாகரனை பற்றி கேட்டபோது அந்த செய்தி உண்மையாக இருக்கும் என தெரிந்தது. அவரது சாவு இவ்வளவு சிக்கிரம் வரும் என நாங்கள் நினைக்கவில்லை.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் குடும்ப வீடு கொல்லத்தில் பூந்தளதாலத்தில் உள்ளது. வேலுப்பிள்ளை எனக்கு மாமா முறை. சின்ன வயதிலேயே அவர் இலங்கைக்கு சென்று விட்டார். அங்கு இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த பையன்தான் பிரபாகரன்.
பிரபாகரனை அழைத்து கொண்டு ஒரு முறை இங்கும் வந்துள்ளார். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை. ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது கேரளாவில் இருந்து மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்தும் போலீசார் என்னிடம் வந்து விசாரித்தார்கள்.
பிரபாகரன் உடலை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது நடக்காது என்பதை நினைக்கும்போது துக்கம் தாங்கமுடியவில்லை. எல்லாம் கடவுள் நிச்சயத்தபடிதானே நடக்கும் என்றார் அவர்.