For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய டால்பின் குட்டி!

By Staff
Google Oneindia Tamil News

Dolphin
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் ஒரு டால்பின் மீன்குட்டி உயிருடன் கரையொதுங்கிக் கிடந்தது.

ராமேஸ்வரம் துறைமுக தென் பகுதியில் இந்த டால்பின் மீன்குட்டி நேற்று முன் தினம் நள்ளிரவி்ல் உயிருடன் கரையொதுங்கிக் கிடந்தது. வால் பகுதியில் கயிறு கட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது அந்த டால்பின் குட்டி. அதைவிடக் கொடுமையாக அதன் வால் துடுப்பில் கயிறு வேறு கட்டப்பட்டிருந்தது.

வலையில் சிக்கிய இந்த மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், வெளியில் தெரிந்தால் ஆபத்து என்று பயந்து கரையிலேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

நேற்று அதிகாலை சில மீனவ சிறுவர்கள் டால்பினை இழுத்துச் சென்று ஆழமுள்ள கடல் பகுதியில் விட்டுவிட்டு வந்தனர். ஆனால், அதற்குள் அது குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவிட்டது.

இதனால் அது பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X