திருவண்ணாமலை சுற்றுலா தலமாக மாற்றப்படும்-தமிழக அரசு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். அங்கு விரைவில் சுற்றுலா அலுவலகம் திறக்கப்படும் என்று தமிழக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் இரண்டு கோடை விழாவின் துவக்க விழா நடைபெற்றது. வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
மலைவாழ் மக்களுக்கு சிறப்பு சலுகையாக 10 லிட்டர் மண்ணெண் ணெய் வழங்கப்படுகிறது. இங்கேயே சாதிச்சான்று களை வருவாய்த்துறை அலுவலகங்கள் நேரில் வந்து வழங்கி வருகின்றனர். மலைப்பகுதியில் 6வது பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.
ஜமுனா மரத்தூர் தற்போது சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. இங்கு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜமுனா மரத்தூரில் இருந்து பரமனந்தலுக்கும் ரூ. 51 கோடியில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 10 லட்சத்தில் மினி சூப்பர் மார்கெட், 8 ஏக்கரில் புதிய பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி மேம்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலைக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
எனவே இங்கு சுற்றுலா அலுவலகம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றார்.