கையில் காசு இல்லை: 80 வயது இமெல்டாவின் இன்றைய நிலை
பிலிப்பைன்ஸின் அழகு ராணியாக வலம் வந்தவர் இமெல்டா. இவரது கணவர் மார்க்கோஸ் அதிபராக இருந்தபோது பெருமளவில் சொத்துக்களைக் குவித்தார். அரசுப் பணத்தில் மஞ்சள் குளித்தார். அவற்றில் பெரும்பாலானவை இமெல்டாவுக்குத் தேவையான நகைகள், அழகு சாதனப் பொருட்கள், உடைகள், செருப்புகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மார்கோஸ் அடித்த கொள்ளை.
இன்று மார்க்கோஸ் இல்லை. இமெல்டாவும் அழகு ராணி என்ற அந்தஸ்தை வீட்டு நீங்கி வீட்டோடு கிடக்கிறார். இமெல்டாவுக்கு ஜூலை 2ம் தேதி 80 வயது பிறக்கிறது.
கோடிக்கணக்கான பணத்தில் படுத்துப் புரண்டு வந்த இமெல்டா இன்று கையில் காசு இல்லாமல் இருக்கிறாராம். கையில் காசு இல்லாவிட்டாலும் கூட அவரது விரலில் 22 கேரட் வைர மோதிரம் ஜொலிக்கிறது. அது மட்டும்தான் இன்னும் தன்னிடம் உள்ள ஒரே சொத்து என்கிறார் இமெல்டா.
இதுகுறித்து இமெல்டா கூறுகையில், 80 வயதாகி விட்டது. இன்னும் பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் கண்களில் நீர் பனிக்க.
இரண்டு அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கிறார் இமெல்டா. இன்னும் கூட பப்ளிசிட்டி பிரியையாகவே இருக்கிறார். கடந்த வாரம் அவரைப் பார்க்க பத்திரிக்கையாளர்கள் வந்தபோது எடுப்பான சிவப்பு நிற உடை அணிந்து நல்ல மேக்கப்புடன் பளிச்செனக் காணப்பட்டார் இமெல்டா.
1986ம் ஆண்டு மார்க்கோஸுக்கு எதிராக பிலிப்பைன்ஸில் பெரும் புரட்சி வெடித்தது. இதனால் மார்க்கோஸ் ஆட்சியை இழந்தார். பின்னர் ஹவாய் தீவுக்கு தப்பி ஓடினார். அவருடன் இமெல்டாவும் தப்பி ஓடினார்.
பின்னர் மார்க்கோஸ், இமெல்டாவின் மாளிகையை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த நகைக் குவியலையும், செருப்பு உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களின் குவியலையும் பார்த்து அதிர்ந்து போயினர். செருப்புகள் மட்டும் 1220 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருந்த இமெல்டா இன்று இப்படி ஆகி விட்டார்..
தமிழகத்திலும் இதேபோல நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகள் ஒரு வீட்டில் கிடைத்தனவே....
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!