மூலிகை வயாகராவை தொடர்ர்ந்து மூலிகை குடிநீர்!
தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை தாவரங்கள் மேம்பாட்டுக் கழகமான டாம்ப்கால் அண்மையில் மூலிகை வயாகராவை அறிமுகப்படுத்தியது. இது விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந் நிலையில் துளசி, நன்னாரி, அதிமதுரம் கலந்த மூலிகை குடிநீரை அறிமுகப்படுத்த டாம்ப்கால் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டாம்ப்கால் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில்,
மினரல் வாட்டரில் துளசி, நன்னாரி, அதிமதுரம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் கலந்து இந்த மூலிகை குடிநீர் தயாரிக்கப்படும். இந்த மூலிகை குடிநீர் ஒரு லிட்டர், அரை லிட்டர் பாட்டில்களில் கிடைக்கும்.
சாதாரணமாக மினரல் வாட்டரில் உடல் நலத்திற்கு தேவையான பொருட்கள் எதுவும் இருப்பதில்லை. தண்ணீரை மட்டும் சுத்தப்படுத்தி கொடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தும் மூலிகை குடிநீரில் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் இருக்கும்.
முதல்கட்டமாக தென்னிந்தியாவிலும் அதன்பின்னர் இந்தியா முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.