For Quick Alerts
For Daily Alerts
Just In
லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கிருஷ்ணர் ரத யாத்திரை
லண்டன்: கிருஷ்ணர் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஜெகன்னாதர் யாத்திரை லண்டன் நகரில் நடந்தது.
40 அடி உயரம் கொண்ட மூன்று அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் இதில் கலந்து கொண்டு இழுத்துச் செல்லப்பட்டன. பஜன் பாடல்கள் ஒலிக்க, இசைக் கலைஞர்கள் இசைக்க, நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி சென்று கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஹைட் பூங்காவிலிருந்து டிராபால்கர் சதுக்கம் வரை இந்த ரத யாத்திரை நடந்தது.
ஒரிசாவின் பூரி நகரில் நடைபெறும் ரத யாத்திரையின் பிரதிபலிப்பாக இந்த ரத யாத்திரை நடத்தப்பட்டது.
இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Monday, June 29, 2009, 15:14 [IST]