For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாலையில் நகர் சோதனை-தென்காசியை கலக்கிய கலெக்டர்

By Staff
Google Oneindia Tamil News

Jeyaram
தென்காசி: திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக கடந்த மாதம் ஜெயராமன் நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அடிக்கடி சோதனைகள் நடத்தி மக்கள் காவலனாக வலம் வரும் அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் தென்காசி நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு, மின்விளக்கு வசதி, சுதாகார சீர்கேடு குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை கண்டு கீழப்புலியூரில் இருந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலை சாரல் மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தென்காசி நகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து தெருக்களிலும் நடந்தே சென்று கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள தகவல் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாக உருவாகி வரும் தென்காசி பகுதியில் மக்கள் பிரச்சனை அறிந்து அதிகாலையில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டரை பொதுமக்கள் புகழ்ந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X