For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சி அருகே 50 ஏக்கரில் யானைகள் காப்பகம்
திருச்சி: திருச்சி அருகே 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும் என திருச்சி வனப் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே உள்ள எம்ஆர் பாளையம் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட உள்ள இந்த பூங்காவில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை யானைகள் காப்பகத்திற்காக ஒதுக்கித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி வனப் பாதுகாவலர் ராமச்சந்திரபதி நிருபர்களிடம் கூறுகையில்,
உயிரியல் பூங்காவின் இயற்கை சூழ்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும்.
இயற்கை சூழலும், அபரிமிதமான தண்ணீர் வசதியும் கொண்ட வகையில் இது அமைக்கப்படும். இங்கு ஒரே நேரத்தில் 10 யானைகளை பராமரித்து வளர்க்க முடியும் என்றார்.
Comments
Story first published: Thursday, July 2, 2009, 14:25 [IST]