மகாபலிபுரத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் மூங்கில் ரிசார்ட்
சென்னை: தமிழகத்தி்ல் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மகாபலிபுரத்தில் மூங்கில் ரிசார்ட் ஒன்று துவக்கப்பட்டு்ள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் மகாபலிபுரத்தில் ரிசார்ட் ஒன்றை அமைத்துள்ளது.
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படும். இதை தவிர்த்து புத்துணர்ச்சிக்காகன சிகிச்சை முறைகள், ஆயுர்வேத பஞ்ச கர்மா முறை, அக்குபிரஷ்ஷர், யோகா மற்றும் தியானம் போன்றவை மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதை தவிர்த்து நீச்சல் குளம், வெண்ணீர் குளியல் என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுகம் இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இந்த ரிசார்ட் அமைக்கும் பணிகள் விரைவாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆயுர்வேத கல்லூரி ஒன்றின் முதல்வர் சிவ ராமகிருஷ்ணன் கூறுகையில், மகாபலிபுரத்தில் மூங்கிலால் செய்யப்ப்டட ஆயுர்வதே மற்றும் மருத்துவ ரிசார்ட்கள் துவக்கப்பட்டுள்ளன. இது வெளிநாட்டினரை மிகவும் கவரும். சுற்றுச்சூழலை காக்கும் நண்பனாக விளங்கும் என்றார்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தி்ன் பொது விவகார மானேஜர் ரவி கூறுகையில், தற்போது இங்கு 75 காட்டேஜ்கள் இருக்கின்றன. சைவம், அசைவம், சைனீஸ் உணவுகள் கிடைக்கும் என்றார்.
மகாபலிபுரத்தில் துவக்கப்பட்டிருக்கும் இந்த மூங்கில் ரிசார்ட்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழகத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என தெரிகிறது.