For Daily Alerts
Just In
துபாயில் தந்தை-மகன் பேன்ஸி டிரஸ் போட்டி
துபாய்: துபாயில் கோடை வினோத விழாவினையொட்டி லாம்ஸி பிளாசாவில் தந்தை, மகன் இடையே பேன்ஸி டிரஸ் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வெங்கடேஷ் மற்றும் அவரது மகன் முதலிடமும், சபிர் அலி கான் மற்றும் அவரது மகன்கள் இரண்டாம் இடமும், ராமன் குமார் சர்மா மற்றும் அவரது மகன் மூன்றாமிடமும் பெற்றனர்.
53 வயதுடைய தந்தை தனது மகனுடன் பங்கேற்றார். இவரே போட்டியாளர்களில் அதிக வயதுடையவர். இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் தங்களது மகனுடன் பங்கேற்றனர்.
இப்போட்டிக்கான நடுவர்களாக ஹார்மனி நிறுவனத்தின் ஆர்த்தி மற்றும் லமா டெஸர்ட் டூர்ஸின் அவதார் சிங் ஆகியொர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் 15 அன்று ஓயசிஸ் சென்டரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பர்
இப்போட்டியினை டிரீம் அட்வர்டைஸிங் நிறுவனத்தினர் நடத்தினர்.
Comments
Story first published: Friday, May 18, 2012, 14:08 [IST]