For Daily Alerts
Just In
ரியாத்-தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம்
இந்திய சுதந்தர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியா ரியாத் மாநாகரில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், நேற்று இந்த முகாமை நடத்தியது.
இதில் தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும், எகிப்து, சூடான் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
காலை 10 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். சவூதி அரேபியாவில் ரத்த தானம் செய்வோரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, August 15, 2009, 15:20 [IST]