For Quick Alerts
For Daily Alerts
Just In
பூடானில் கலாச்சார மையம் திறக்கும் இந்தியா
இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் பூடான் அரசு ஆகியவை இணைந்து இந்த மையத்தைத் திறக்கவுள்ளன. தலைநகர் திம்புவில் இந்த மையம் தொடங்கப்படும்.
இதுகுறித்து இந்தியத் தூதரகத்தின் 2வது செயலாளர் கே.கே.சர்மா கூறுகையில், இந்தியா கலாச்சார செழுமை வாய்ந்த நாடு. நமது நாட்டின் கலாச்சாரம் உலக நாடுகளை கவர்ந்து இழுக்கிறது.
இந்த நிலையில் பூடாவில் திறக்கப்படவுள்ள கலாச்சார மையம், பூடான், இந்திய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்திய கலாச்சாரம் குறித்து பூடான் மக்கள் பெரிதும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்றார்.
இந்த மையத்தில் பூடானைச் சேர்ந்த பிரபல ஓவியர்கள், சிற்பிகள், பிற துறை கலைஞர்களின் படைப்புகளும் இடம் பெறவுள்ளதாம். கலை மற்றும் கைவினைப் பொருட்களின் கூடமாகவும் இது விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, August 23, 2009, 13:45 [IST]