கற்பழிப்பு வழக்கில் பேஷன் டிசைனர் ஆனந்த் ஜானுக்கு 59 ஆண்டு சிறை
வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை இவர் கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க போலீஸார் ஜானைக் கைது செய்தனர். அவர் மீது கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுக்களை போலீஸார் சுமத்தினர். இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் வாக்குமூலம் அவருக்கு எதிராக வலுவாக அமைந்தது.
இந்த வழக்கை லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி டேவிட் வெஸ்லி அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஆனந்த் ஜான் கோருகிறார். ஆனால் அதற்கான காரணம் இல்லை.
ஆனந்த் ஜான் சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் ஆயுள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஆனந்த் ஜானின் ஜாமீன் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் ஆனந்த் ஜான்.