வேளாங்கண்ணி திருவிழா: நாகூருக்கு 2 சிறப்பு ரயில்கள்
நாகூர்: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகூருக்கும், நாகூரில் இருந்து மும்பை குர்லாவுக்கும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாகூரில் நடக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வரும் 7ம் தேதி இரவு 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகூரை சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
மேலும் வரும் 8ம் தேதி மதியம் 3.30 மணிக்கு நாகூரில் இருந்து மும்பை குர்லா லோக்மான்ய திலகர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் 10ம் தேதி காலை 5.05 மணிக்கு குர்லா சென்றடையும்.
இது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம், ரெனிகுண்டா, ரசம்பேட், கடப்பா, யரகுந்தலா, கொன்டபுரம், தடிபத்ரி, குன்டக்கல், மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், குல்பர்கா, சோலாப்பூர், புனே, கல்யாண் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 2 ஏசி, 10 ஸ்லிப்பர் வகுப்பு, 3 இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டு லக்கேஜ் பெட்டிகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.