For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரலாற்று சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை சித்தரிக்கும் வரலாற்று சின்னங்களை கண்டறிந்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளதாக அதன் முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொல்லியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதன்மைச் செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்து பேசுகையில்,

தமிழகத்தில் தொல்லியல் துறை 1967ல் துவங்கப்பட்டு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் வெட்டுகளை ஆய்வு செய்துள்ளோம். இதை பல புத்தகங்களாக வெளியிட்டும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டறிந்து பாதுகாத்தும் வருகிறோம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் தமிழகத்தில் உள்ள 14 மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ளன. பழங்கால ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்களை தேர்வு செய்து பிராமி, வட்டெழுத்து, கல்வெட்டு குறித்து பயிற்சியளித்து வருகிறோம்.

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள ராஜேந்திர சோழன் அரண்மனை உட்பட 35 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. பழங்கால கோட்டைகள், கோவில்கள் போன்ற 85 வரலாற்று சின்னங்களை பாதுகாத்து வருகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X