உடல்தானம் செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்!
திருப்பூர்: துணை முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து உடல்தானம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.
நமது உயிர் பிரிந்தாலும் உடல் உறுப்புகள் மற்றவர் உடலில் வாழும் வகையில் தானம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை அடுத்து திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட உடல்தானம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று இதை தெரிவித்தார்.
அவருடன் அவரது மனைவி உமாதேவி, மேயர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்தனர்.
விழாவில் அவர் மேலும் பேசுகையில்,
தானத்தில் சிறந்தது உடல் தானம். நமது உடலை மண்ணுக்கு இரையாக்க கூடாது. நமது உறுப்புகள் மற்றவர் உடலில் வாழும் வகையில் தானம் செய்ய வேண்டும். இதனால் இறந்த பிறகும் பிறருக்கு உதவிட முடியும் என்றார்.
அமைச்சர் சாமிநாதனின் இந்த செயலுக்கு பொது மக்கள் மற்றும் சமூக சேவர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.