மனித நேயத்தை பின்பற்றி இந்தியாவை முன்னேற்றுவோம் - கூறுகிறார் கேரள மாஜி அமைச்சர்
குற்றாலம்: மனித நேயத்தை கடைபிடித்து முன்னேற்ற பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல வேண்டும் என கேரள முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
குற்றாலத்தில் கேரள சமாஜ் சார்பில திருவாங்கூர் அரண்மனையில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் கேரள முன்னாள் பொதுப்பணிதுறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் ஏராளமான ஜாதிகளையும், மதங்களையும் சேர்ந்தவர்கள், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம்.
அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும், இனத்தவருக்கும் தங்களுக்குரிய சுதந்திரத்தை நம் தாய்திருநாடு வழங்கியுள்ளது.
நம் நாட்டில் நாம் ஓருவருக்கொருவர் மற்றவர்களை மதித்து வாழும் பண்பாட்டை பின்பற்றி வருகிறோம். நாம் அனைவரும் மனித நேயத்தை கடைபிடித்து முன்னேற்ற பாதையில் இநதியாவை கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒரு மக்களாக வாழ்ந்து காட்டுவோம் என வாழ்த்துகிறேன் என்றார்.