நாமக்கல் அருகே சாட்டையால் பேய் விரட்டும் திருவிழா
நாமக்கல்: நாமக்கல் அருகே விஜயதசமி அன்று சாட்டையால் பேயை அடித்து விரட்டும் வினோத பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள அச்சப்பன் கோவில் இருக்கிறது. குரும்பர் இன மக்கள் மத்தியில் பிரபலமான இந்த கோயிலில் அவர்கள் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டும் இத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. குரும்பர் மக்கள் பொங்கல் வைத்து விழாவினை துவக்கினர். பின்னர் அச்சப்பன் சுவாமிக்கு அலங்காரம் செய்து தப்பட்டம், கோலாட்டத்துடன் காட்டு கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
காட்டுகோவில் முன்பாக பெண்கள் வரிசையாக மண்டியிட்டு கைகளை உயர்த்தி நின்றனர். அப்போது பெரிய பூசாரி அந்த பெண்களின் கைகளில் சாட்டையால் ஓங்கி அடித்து பேய் விரட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பல பெண்கள் முதல் அடியிலே கைகளை உதறியபடி எழுந்துவிட்டனர். சில பெண்கள் 4 முதல் 5 அடி வரை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றனர்.