For Daily Alerts
Just In
நெல்லையில் நாளை கைத்தறி கண்காட்சி துவக்கம்
நெல்லை: தீபாவளியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கைத்தறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது நாளை 01.10.09 அன்று பாளையங்கோட்டை நேரு சிறுவர் கலையரங்க மைதானத்தில் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.
துவக்க விழாவுக்கு தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மைதீன்கான் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். அமைச்சர் பூங்கோதை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதில் போர்வைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், கைலிகள், வேட்டி, பட்டு சேலைகள், பருத்தி சேலை ஆகியவை 30 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
Comments
Story first published: Wednesday, September 30, 2009, 11:59 [IST]