மெகா டிவியில் 'தமிழகத்தில் மாகாத்மா'
இன்று (02-10-2009) மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்சியில்,
மகாத்மா காந்தி 1896 முதல்1946 வரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். 16 முறை தமிழகத்தில் தங்கியுள்ள காந்தியடிகள் தமிழர்களுடன் கொண்ட தொடர்பு காந்திக்கும், தமிழர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தொடர்பு காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் இருந்து தன் கடைசி காலம் வரை நீடித்தது. காந்தியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வான ஆடை மாற்றம் தமிழகத்தில் தான் நிகழ்ந்தது.
தமிழர்களின் வறுமை கண்டு மனமாற்றம் அடைந்த காந்தி எளிமை வாழ்வை முன்னிறுத்தி அரையாடை அணிந்துகொண்டார்.
அண்ணல் காந்தியடிகள் தமிழகத்திற்கு வந்தபோது ராஜாஜி, காமராஜர், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, ஜி.ஏ.நடேசன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார்
உத்தமர் காந்தியடிகள் 1896 முதல் 1946 வரை தமிழர்கள் மற்றும் தமிழக தலைவர்களை சந்தித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு தமிழகத்தில் மாகாத்மா... என்ற சிறப்பு நிகழ்ச்சியாக இன்று ஒளிபரப்பாகிறது.