For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்பு

Google Oneindia Tamil News

Govt declares dolphin national aquatic animal
டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது.

இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X