தேவர் குரு பூஜைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - ஏ.டி.ஜி.பி . கே.ராதாகிருஷ்ணன்
மதுரை: தேவர் குருபூஜையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30 ம் தேதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தேவர் குரு பூஜையை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் கூடுதல் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை முன்னிட்டு வரும் 29 மற்றும் 30 ம் தேதிகளில் தேவர் நினைவிடம், ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சிறப்புப்படை போலீசாரும் பணிக்கு அழைக்கபடுவர். எந்த வித அசம்பாவிதம், போக்குவரத்து பிரச்னை இன்றி விழாவை நடத்துவது தான் எங்கள் குறிக்கோள். பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக உள்ளன என்றார்.