செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு - புதுவைப் பேராசிரியருக்கு விருது
புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு 2006-07ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிஐபி (பத்திரிகை தகவல் அலுவலகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடிகளாசிரியருக்கு தொல்காப்பியர் விருது ...
செம்மொழி தமிழில் சீறிய பணியாற்றியதற்காக, 2005-06, 2006-07, 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, தொல்காப்பியர் விருது (2006-07) பேராசிரியர் அடிகளாசிரியருக்கு கிடைத்துள்ளது.
ஜார்ஜ் ஹரிக்கு குறள்பீடம் விருது...
குறள் பீடம் விருது (2006-07) ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கு (அமெரிக்கா) தரப்பட்டு உள்ளது.
தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், தமிழ் உயராய்வு நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், "சம்ஸ்கிருத மொழியைவிட தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்துக்கான தகுதி அதிகம் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
சம்ஸ்கிருத மொழியை ஆய்வு செய்வதற்காக, இந்தியா வந்த ஜார்ஜ் ஹார்ட், தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டு அதில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் அறிஞர்கள் விருது (2005-06)
முனைவர்கள் ஆர்.ஆரவேந்தன், ஒய்.மணிகண்டன், எஸ்.கலைமகள், வ.மு.செ.முத்துராமலிங்க ஆண்டவர், கே.பழனிவேலு ஆகியோர் பெறுகின்றனர்.
2006-07-ம் ஆண்டு விருதுகள்
முனைவர்கள் எஸ்.சந்திரா, அரங்க பாரி, மு.இளங்கோவன், எம்.பவானி, ஆர்.கலைவாணி ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
2007-08-ம் ஆண்டு விருதுகள்
முனைவர்கள் எ.செல்வராசு, பி.வேல்முருகன், எ.மணவழகன், எஸ்.சைமன் ஜான், எஸ்.சந்திரசேகரன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.