நெல்லை பல்கலையில் 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டம்
நெல்லை: நெல்லை பல்கலை மூலம் இவ்வாண்டு 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பல்கலையில் 17வது பட்டமளிப்பு விழா வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலை வளாகத்தில் நடக்கிறது. விழாவிற்கு பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.
தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பட்டமளிபபு உரை நிகழ்த்துகிறார்.
இந்த ஆண்டு 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா தினத்தில் 107 ஆண்கள் உள்பட 195 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுடன் சேர்ந்து பல்வேறு பாட பிரிவுகளில் முதல் இடம் பிடித்த 117 பேருக்கு விருது, பட்டங்கள் வழங்கப்படுகிறது என்றார்.