செம்மொழி மாநாட்டு இலட்சினை-சொல்வது என்ன?
இந்த இலட்சினையின் சிறப்பம் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்:
கடல்கோள்களை எதிர்கொண்டு, காலவெள்ளத்தைக் கடந்து சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தனது மூன்று விரல்களில் காட்டிக் கொண்டிருக்கும் வகையிலான சிலை இதில் இடம்பெற்றுள்ளது. அறம், பொருள், இன்பம் என அவர் காட்டிய முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகமும் ஒன்று.
அதன் சின்னங்களும், குறியீடுகளும் திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இலச்சினையில் ஏழு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு என்பது தமிழர்களுக்கு உரிய சிறப்பான எண்ணாகும்.
மாநாட்டின் மோட்டோ:
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந்துள்ளது'' என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.