ஏர்வாடி சந்தனக்கூடு-சமூக நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு
கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லாஹ் நினைவிடம் உள்ளது.
இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் சந்தன கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 835-ம் வருட சந்தன கூடு திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சந்தனக்கூடு எடுத்துவரும் ஊர்வலம் பெரிய ஏர்வாடியிலிருந்து புறப்பட்டு தர்ஹாவை வந்தடைந்தது.
ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் அணிவகுத்து வந்தன. மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் வெள்ளிப்பேழையில் யானை மீது எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் புதன்கிழமை அதிகாலை பூசப்பட்டது.
ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வந்தனர்.
இதன்மூலம் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாக இந்த விழா நடந்தது.