ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் 28வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.ஷார்ஜா எக்ஸ்போ சென்ட்ரில் நடக்கும் இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி கடந்த புதன்கிழமை துவக்கி வைத்தார்.
இதில் காஸிமி தனது சுயசரிதை நூலையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் மும்பை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.டி. கர்னிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் உலகமெங்கிருந்தும் 618 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் 440 அரபு புத்தக வெளியீட்டாளர்களும், 178 வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களும் 23 அரபு நாடுகளிலிருந்தும், 26 வெளிநாடுகளிலிருந்தும் பங்கேற்றுள்ளனர்.
இக்கண்காட்சியில் 110,000 தலைப்புகளில் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்தவரால் அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் அல் முத்தனபி புத்தக நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இக்கண்காட்சியினைக் காண புத்தக ஆரவலர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு இலக்கிய நிகழ்வில் மலையாள எழுத்தாளர் சுகந்த குமாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இக்கண்காட்சி நவம்பர் 21ம் தேதி வரை நடைபெறும். வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை நடைபெறும்.