சென்னையில் ஜப்பானிய இசை நிகழ்ச்சி- இன்றும், நாளையும்
சென்னை: பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார பாடல்களை தமிழக இசை ரசிகர்கள் நேரில் கேட்டு மகிழ ஒகினவா தீவில் இருந்து பிரபல இசைக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.
புகழ்பெற்ற பாடகர் யசுகட்சு ஓஷிமா தலைமையில் இசைக் கலைஞர்கள் வந்துள்ளனர். சென்னை ராணி சீதை ஹாலில் இன்றும் நாளையும் மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் உள்ள ஜப்பானிய துணை தூரகமும் டோசாக்காய் தமிழக மையமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சியை கண்டுகளிக்க அரங்கத்தில் நுழைவு கட்டணம் எதுவுமில்லை. பாடகர் ஒஷிமா நிருபர்களிடம் பேசுகையில், 'சென்னை எங்கள் ஒகினவா தீவைப் போலவே நிறைய மரங்கள் மற்றும் அதிக வெயிலுடன் உள்ளது' என்று ஆரம்பித்த அவர், 'இந்த இசை நிகழ்ச்சியை பார்த்தால், ஒவ்வோரு நூற்றாண்டிலும் இசை எவ்வாறெல்லாம் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை உணர முடியும்.
நாள்கள் புதிதாக நிறைய இசை அமைக்கிறோம். ஆனால், கலாச்சாரத்தை மாற்றுவதில்லை. பழைய மெட்டுக்களைக் கூட புதுப்பிப்போம். ஆனால், அதில் வேற்று கலாச்சாரத்தின் தாக்கம் இருக்காது' என்றார்.