For Daily Alerts
Just In
கடல்வழி ஊடுறுவலா?-1093க்கு டயல் செய்யலாம்!
கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் கடலோர காவல்படையை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இத்துடன், கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் சந்தேகப்படும் வகையில் யாரையாவது கண்டால் உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க தனி தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
1093 என்ற இந்த தொலைபேசி எண்ணை அழைக்க கட்டணம் கிடையாது. இவ்வசதியை தமிழக கடலோர காவல் படை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயராமன் கூறினார்.
Story first published: Wednesday, November 25, 2009, 11:19 [IST]