For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு
தருமபுரி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் திருமணம், குழந்தைபிறப்புகளை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் மணிவண்ணன் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில்,
முன்னாள் ராணுவத்தினரின் திருமணம், விவாகரத்து, குழந்தைகளின் பிறப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை அவர்களின் ஆவணக் காப்பகத்தில் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்துகொள்ள ராணுவத் தலைமையகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. பதிவு செய்யும் வீரர்கள் உரிய ஆவணங்களுடன் துறைஅலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, December 3, 2009, 13:05 [IST]