தமிழறிஞர்கள் பார்வைக்கு தமிழ்த் தாய் சிலை - திருத்தம் சொல்லலாம்
இதுகுறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனர், பொதுச் செயலாளர் உடையார்கோயில் குணா கூறுகையில்,
தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் தமிழ்த்தாய்க்கு வெண்கல சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுவாமிமலை குபேரன் சிற்பக் கலைக்கூடத்தில் இந்த சிலையின் முன்மாதிரி மெழுகில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகு சிலையில் தமிழறிஞர்கள் திருத்தங்களை தெரிவித்தால் அதனை திருத்திக் கொள்வதற்காக சென்னையில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக சிற்றரங்கத்தில் இந்த தமிழ்த்தாய் சிலை நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இந்த சிலை 7ம் தேதி ஐம்பொன் சிலையாக வார்க்கப்படுகிறது. பின்னர் தமிழக அரசின் அனுமதி பெற்று கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கோவை வரை தமிழ்த்தாய் சிலை அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
எனவே தமிழறிஞர்கள் நாளை இந்த சிலையை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைத் தெரிக்கலாம் என்றார்.