For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனவளர்ச்சி குன்றியோர், ஊனமுற்றோருக்காக சீரிய பணியாற்றிய கலெக்டருக்கு குடியரசுத் தலைவர் விருது

By Staff
Google Oneindia Tamil News

Collector Devarajan
நெல்லை: மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான குடியரசு தலைவரின் விருதுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் வரும் 3ம் தேதி நடைபெறும் உலக ஊனமுற்றோர் தினவிழாவில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலிடம் இந்த விருதை கலெக்டர் பெற்றுக் கொள்கிறார்.

மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஊனமுற்றோர்க்கான மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ராதாபுரம் மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் இயங்கி வரும் ஹெலன் பிளாரிட்டி ஊனமுற்றோர் மைய நிறுவனர் தேவராஜனும், தனிநபருக்கான இந்த தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை சார்பில் உள்ளூர் அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட இந்த குழுவில் ஊனமுற்ற நபர் ஓன்றும், மனவளர்ச்சி குன்றியோர் நிறுவனத்தை நடத்தும் ஒருவரும் என மூவர் உறுப்பினராக உள்ளனர்.

இக்குழுவின் மூலம் இந்த ஆணடு நாட்டிலேயே அதிக அளவில் 944 பேருக்கு ஊனமுற்றோர் காப்பாளர் பத்திரம், நிர்மயா சுகாதார காப்பீட்டு திட்ட பாலிசி 570 பேருக்கு வழங்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X