For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை சேர்ந்த 16 ஐ.ஏ.எஸ்கள் தயார்!

Google Oneindia Tamil News

சென்னை: 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று உத்தரகண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் மரியம் பர்ஸானா சாதிக், லலிதா லட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு கேடர் பதவியே கிடைத்துவிட்டதால் சொந்த மாநிலத்திலேயே ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற 14 பேருக்கு வெவ்வேறு மாநிலங்களில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களது பெயர்-ஒதுக்கப்பட்ட மாநில விவரம்:

1. சிபி சக்கரவர்த்தி (மத்தியப் பிரதேசம்)

2. ராஜேந்திர சோழன் (அஸ்ஸாம்)

3. விஸ்வநாதன் (அஸ்ஸாம்)

4. வினோத் (அஸ்ஸாம்)

5. ஐரீன் சிந்தியா (மத்தியப் பிரதேசம்)

6. ராதாகிருஷ்ணன் (மகாரஷ்டிரம்)

7. பரமேஸ்வரன் (ராஜஸ்தான்)

8. ரவீந்திரன் (மராட்டியம்)

9. விஜயேந்திர பாண்டியன் (உத்தரப் பிரதேசம்)

10. மது ஷாலினி (மத்தியப் பிரதேசம்)

11. அசோக் (சண்டிகர்)

12. முத்துக்குமார் (ஒரிஸ்ஸா)

13. என்.ஜி.ராஜமாணிக்கம் (கேரளா)

14. தீபா (கர்நாடகா)

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிர்வாகப் பணித் தேர்வுகளில் வெல்வது அதிகமாகி வருகிறது.

ஆனால், ஐ.எப்.எஸ். (இந்திய வெளிநாட்டு பணி) பணிக்கு தேர்வு செய்யப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அனிதா நந்தினி, பிஜய் செல்வராஜ், என்.சுபாஷினி ஆகிய மூவர் மட்டுமே ஐ.எப்.எஸ். வென்றது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X