தென் மண்டல நீச்சல்-5 தங்கம் அள்ளிய சென்னை சிறுமி
கோவை: கோயம்புத்தூரில் நடந்த தென் மண்டல நீச்சல் போட்டியில் சென்னை மாணவி தர்ஷினி 5 பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
இந்த மாணவி சென்னை அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கோவை அமிர்தா பல்கலைக்கழத்தில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியின் போது அவர் இந்த சாதனை படைத்துள்ளார். அவர் தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளினார்.
இது குறித்து தர்ஷினி கூறியது
பட்டர்பிளை 100 மீ, 200 மீ, மெட்லே 200 மீ, ப்ரீ ஸ்டைல் 200 மீ உள்ளிட்ட 5 பிரிவுகளில் பங்கேற்றேன். இதில் அனைத்து போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றேன். இதுவரை மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளென 300 பதக்கங்களை வென்றுள்ளேன். சர்வதேச சாதனைகளை முறியடிப்பதுதான் எனது லட்சியம் என்றார்.