For Daily Alerts
Just In
சென்னை முகம்மது சதக் நர்சிங் கல்லூரியில் மகளிர் தின விழா
சென்னை: சென்னை முகம்மது சதக் ஏ.ஜே. நர்சிங் கல்லூரியில் நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாளை மாலை 3 மணி முதல் 4 மணி வரை கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் முகம்மது சதக் கலை, அறிவியல் கல்லூரி துணைத் தமிழ்ப் பேராசிரியை நசீமா சிக்கந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
அனைவரின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைகள், சம வாய்ப்புகள் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்.
சென்னை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். ஹமீத் அப்துல் காதிர் தலைமை தாங்குகிறார். நர்சிங் கல்லூரி தாளாளர் இ.எஸ்.எம். பஷீர் அகமது முன்னிலை வகிக்கிறார்.
நர்சிங் கல்லூரி இயக்குநர் வத்தனா பிரபாகரன் வரவேற்புரையாற்ற, முதல்வர் பேராசிரியை ரமா சாம்பசிவம் நன்றியுரை நவிழ்கிறார்.
Comments
Story first published: Sunday, March 7, 2010, 16:07 [IST]