For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊட்டியில் வாசனை திரவிய கண்காட்சி நடத்த திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Ooty
ஊட்டி: கோடையை முன்னிட்டு ஊட்டியில் மலர் மற்றும் பழக் கண்காட்சியோடு, வாசனை திரவங்களின் கண்காட்சியையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் மலர் மற்றும் பழக்கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான மலர் மற்றும் பழக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தோட்டகலை துறை இயக்குனர் சந்திர மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மே மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ரோஜா கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், மே 14, 15, 16, ஆகிய நாட்களில் மலர் கண்காட்சியும், 22, 23 ம் தேதிகளில் குன்னூரில் பழக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 29, 30 தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத ஒரு புதிய முறையாக இந்த முறை வாசனை திரவங்களின் கண்காட்சி நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X