சிம்லாவில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை!
இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் 108 அடி அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே மிகப் பெரிய அனுமன் சிலை ஆகும்.
இமாச்சல பிரதேசத் தலைநகரமான சிம்லா பிரபலமான சுற்றலாத் தலமாகத் திகழ்கிறது. தற்போது அதற்கு இன்னும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது.
சிம்லாவின் ஜக்கு மலைப்பகுதியில் உலகிலேயே மிகவும் உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்த பிறகு ஜக்கு மலைப்பகுதியில் தான் இளைப்பாறியதாகக் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே பழமை வாய்ந்த அனுமன் கோவில் உள்ளது.
இந்நிலையில் தற்போது அனுமனுக்கு 108 அடி உயர சிலையை நந்தா அறக்கட்டளை நிறுவியுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் பிரேம்குமார் துமால் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அபிசேக் பச்சன், அவரது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா மற்றும் நந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.