உலக வெப்பமயமாதல் புதுவையில் விழிப்புணர்வு பேரணி !
புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி முல்லை நகரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராஜன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். புதுச்சேரி நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் மரக்கன்றுகளை நட்டார்.
சம்மேளனதத்தின் கவுரவத் தலைவர் பாலமோகனன் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். உருளையன் பேட்டையில் துவங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மறை மலைஅடிகள் சாலை, அண்ணாசாலை, பட்டேல் சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை எதிரே முடிவடைந்தது
சம்மேளன பொது செயலாளர் புகழேந்தி, மற்றும் சம்மேளன நிர்வாகிகள் கீதா, இளங்கோ, கலைச்செல்வன், பாலு, நமச்சிவாயம், அறிவியல் இயக்க நிர்வாகிகள் ரகுநாத், பரசுராமன், சுதர்சனன், விஜயமுர்த்தி, முஎகச மாநில துணைபொதுச் செயலாளர் ராமச்சந்திரன் எல்ஐசி ஊழியர் சங்க புதுவை தலைவர் ராம்ஜி உள்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.