For Daily Alerts
Just In
மெரீனா கடற்கரையை இனி சைக்கிளில் சுற்றி வரலாம்!
சென்னை: மெரீனா கடற்கரையை சைக்கிளில் சுற்றிப் பாக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெயர் பெற்ற மெரீனாவின் எழிலை மேம்படுத்த ரூ. 26 கோடி செலவில் பூங்காக்கள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலும் ஒரு சிறப்பு ஏற்பாடாக கடற்கரையில் சைக்கிளில் சுற்றி வருவதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி செய்து வருகிறது. இது குறித்து மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
நீண்ட மெரீனா கடற்கரை முழுவதையும் சுற்றி வர சைக்கிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
கடற்கரை சர்வீஸ் சாலையில் சைக்கிளில் செல்லலாம். இதற்காக கார் பார்க்கிங் மாற்றி அமைக்கப்படும் என்றார்.
Comments
Story first published: Monday, September 13, 2010, 18:14 [IST]