மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற தீவிர நடவடிக்கை
இந்தச் சான்றிதழ் பெற எடுக்க வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய கோவில் இணை ஆணையர் பத்மநாபன்,
சென்னையில் கபாலீஸ்வரர், வடபழனி, பார்த்தசாரதி கோவில்கள் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்கள் பெற்றுள்ளன. தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ராமேசுவரம் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கும் தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்த தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோவிலின் சுத்தம், பாராமரிப்பு, சேவை போன்றவை மேம்படும்
கோவிலின் உள்பகுதியை சுகாதார பணியாளர்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியம், பிரசாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு தரமாக வழங்க வேண்டும் என்றார்.
இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் தென் தமிழகத்திலேயே ஐ.எஸ்.ஓ. பெற்ற முதல் கோவிலாக மீனாட்சி அம்மன் கோவில் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.