பிஃபா நடுவர் பயிற்சிக்கு இந்தியாவின் பென்ட்லா டிகோத் தேர்வு
கேரளாவைச் சேர்ந்த பென்ட்லா, முன்னாள் சர்வதேச வீராங்கனையானாவார். ஒலிம்பிக் போட்டியில் நடுவராகப் பணியாற்றியவர். முதல் முறையாக பிஃபா நடுவர் பயிற்சி வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பெண் நடுவர் ஆவார்.
இந்தப் பயிற்சி வகுப்பு காத்மாண்டுவில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவரான பென்ட்லா பல்வேறு சர்வதேச, தேசியப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். இதுதவிர 20 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பைப் போட்டி, ஒலிம்பிக், ஆசியா கோப்பை, ஆசிய விளையாட்டு, தென் கிழக்கு ஆசிய விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜூலை 30ம் தேதி காத்மாண்டு கிளம்புகிறேன் என்றார். இந்த பயிற்சி முகாமில் 3 பெண்கள் உள்பட 30 நடுவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் பென்ட்லா பங்கேற்கவுள்ளார்.