பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ஓய்வறை: இலவசமாக கட்டும் சென்னை நிறுவனம்
மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு போதுமான அளவில் ஓய்வறை இல்லாததால் அவதிபடுகின்றனர். நெடுந்தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் பம்பை வரை வாகனத்தில் வந்து விட்டு பின்னர் அங்கிருந்து மலையேறி வருகின்றனர்.
மலையேறுவதற்கு முன்னதாக பம்பை வரும் பக்தர்கள் சிறுது நேரம் ஓய்வெடுக்க வசதியாக ஓய்வறைகள் கட்டப்பட வேண்டும என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பம்பையில் ஓய்வறைகள் கட்டுவதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. பம்பையில் உள்ள திருவேணி பாலத்துக்கு அருகே ஏராளமான காலி மனைகள் உள்ளன. இந்த இடத்தில் 100 மீ்ட்டர் நீளத்திலும் 20 மீட்டர் அகலத்திலும் ஓய்வறைகள் கட்டலாம் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை இலவசமாகக் கட்டி கொடுக்க முன் வந்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சபரி்மலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.