For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் ரயில்களில் பயணிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் வசதி

Google Oneindia Tamil News

Railway
டெல்லி: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விரைவில் 24 மணி நேர பயணிகள் ஹெல்ப்லைன் தொலைபேசி வசதி செய்யப்படவுள்ளது.

3 இலக்கம் கொண்ட இந்த ரயில்வே பயணிகள் ஹெல்ப்லைன் வசதி, பயணங்களின்போது சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பயணிகளுக்கு உதவும். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். அகில இந்திய அளவிலான சேவையாக இது இருக்கும்.

இதுகுறித்து ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது கூறுகையில், அகில இந்திய அளவிலான ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்த 2010-11 பட்ஜெட்டில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும். இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழும்போது இந்த ஹெல்ப்லைனை பயணிகள் பயன்படுத்தி உதவி நாட முடியும்.

இந்த வசதியை முழுமையாக்குவதற்காக தற்போது அனைத்து ரயில்வே போலீஸ் நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி முடிந்ததும் ஹெல்ப்லைன் சேவை தொடங்கும்.

அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைகள், ரயில்வே காவல் நிலையங்கள் ரூ. 4.41 கோடி செலவில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X