கடற்கரையில் அத்துமீறும் காதலர்கள்-கண்காணிக்க போலீஸுக்குப் புது பைக்
சென்னை: சென்னை கடற்கரைகளில் அத்துமீறி நடந்து கொள்ளும் காதலர்களை கண்காணிக்க புதிய அதி நவீன பைக்கை சென்னை காவல்துறை வாங்கியுள்ளது.
எந்த வகையான தரைப் பரப்பிலும் இந்த பைக், பார்க்க சிறுவர்கள் விளையாடும் பொம்மை பைக் போலவே காட்சி தருகிறது. ஆனால் பீச்சில் படு அனாயசமாக இது பறக்கிறது.
இந்த வாகனத்தைக் கொண்டு தற்போது போலீஸார் ரோந்து சுற்ற ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பைக் இது. மலை, மணல், சாலை என எந்தப் பரப்பிலும் இது ஓட்டலாம்.
நான்கு சக்கரம் கொண்ட இந்த பைக்கில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை போக முடியும். இந்தியாவிலேயே முதல் முறையாக பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த பைக்கை ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தியுள்ளனர்.
கடற்கரையில் அத்துமீறி நடப்போர், தடையை மீறி கடலில் குளிப்போரை இவர்கள் கண்காணித்து அப்புறப்படுத்துவார்கள்.
பெசன்ட் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் அடுத்து மெரீனா கடற்கரை உள்பட சென்னையில் அனைத்து கடற்கரைகளிலும் விரிவுபடுத்தபப்டும்.