அமீரகத்தில் பெட்ரோல் விலை வியர்வு: மக்கள் தவிப்பு
துபாய்: அமீரகத்தில் பெட்ரோல் விலை கடந்த வியாழன் முதல் 20 ஃபில்ஸ் அதிகரித்துள்ளது. மூன்று மாதத்தில் இது இரண்டாவது விலை அதிகரிப்பு.
இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறதே என்று மக்கள் புலம்புகிறார்கள் என்றால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதே கதைதான்.
எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தைக் குறைக்கும் வண்ணம் அங்கும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வால் அங்குள்ள மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இது, எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தால் வெளியான தவிப்பு.
விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 1.72 திர்ஹம் (சுமார் 20 ரூபாய்), சூப்பர் வெரைட்டி பெட்ரோல் 1.82 திர்ஹம் (சுமார் 22 ரூபாய்) விற்கப்படுகிறது பெட்ரோல்.
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பேருந்து கட்டணங்கள் உயராது என தெரிவித்து, எரியும் பெட்ரோலில் கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றியுள்ளது அமீரக அரசு.