அமெரிக்க வாழ் இந்திய ஆசிரியை அதிபர் விருது பெறுகிறார்
மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஹன்டிங்டவுன் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிபவர் ராதிகா பிளகோட். சிறந்த முறையில் பாடம் கறபித்தமைக்காக அதிபர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அறிவியலும் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் பிரதான்மைப் பாடங்கள். இத்துறைகளில் அமெரிக்கா சிறந்து விளங்கக் காரணம் வல்லுநர்கள். அவ்வல்லுநர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை பாராட்டுவதாக அதிபர் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார் ஒபாமா.
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து அதிபர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு ஆண்டு 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மறு ஆண்டு 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழும், ரூ. 5 லட்சமும் வழங்கப்படுகிறது.
அறிவியலுக்கும் கணிதத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கடந்த ஆண்டு அதிபர் ஒபாமா கூறியிருந்தைடுத்து பல நிறுவனங்கள் ரூ. 50 கோடி நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.